Search This Blog

Friday, September 10, 2010

சிக்கன் உப்புமா


என்ன தலைபே   வித்தியாசமாக இருகிறதா .

நான் இதை செய்ய வேண்டி வந்த சந்தர்பமும் வித்தியாசமானது.

நேற்று மாலை நேர உணவிற்காக இஞ்சி சிக்கன் ட்ரை  செய்தேன் .
மணம் ,நிறம் எல்லாம் நன்றாக இருந்தது . நானும் என் சக நண்பரும் சாப்பிட இருந்தோம்.
வாயில் வைத்த போது சாப்பிட முடிய வில்லை. உப்பு அதிகம் ஆயுடுச்சு .

என்ன செய்ய ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு  விட்டு ,மீதமானதை நாளை எதாவது செய்யலாம் என்று வைத்து விட்டோம்.

காலை எழுந்து குளித்து  விட்டு டிபன் செய்ய யோசித்தேன் .
சிக்கனை எதாவது செய்ய எண்ணினேன் .அப்போது கண்ணில் பட்டது ரவை.
சரி இந்த ரெண்டையும் சேர்த்து கலக்கினால் என்ன என்று தோன்றியது.
உடனே செயலில் இறங்கினேன் .

அந்த மீதமான சிக்கனில் ரெண்டு தம்ளர் வெள்ளம் சேர்த்தேன் .
ஒரு வெங்காயம் நறுக்கி சேர்த்து கொதிக்க வைத்தேன் .
நன்றாக கொதித்ததும் அதில் ரவை சேர்த்து நன்றாக கிளறி ,கறிவேப்பிலை சேர்த்து இறக்கினேன் .
சுவையான ' சிக்கன் உப்புமா' ரெடி.

ரெம்ப நன்றாக இருந்தது.



3 comments:

pichaikaaran said...

சொல்லி இருந்தா வந்து இருப்போம்ல... படிக்குபோதே எச்சில் ஊறுது

பித்தன் said...

ok appo nalabaagam irukkunno sollungo

ஞாஞளஙலாழன் said...

ஆகா..விட்டால் ஒரு சமையல் புத்தகம் ரெடி பண்ணிடுவீங்க போலிருக்கே..

"ரெண்டு டம்ளர் வெள்ளம் சேர்த்து" !!!!!!! பார்டரோ?!!!!