Search This Blog

Friday, September 10, 2010

சிக்கன் உப்புமா


என்ன தலைபே   வித்தியாசமாக இருகிறதா .

நான் இதை செய்ய வேண்டி வந்த சந்தர்பமும் வித்தியாசமானது.

நேற்று மாலை நேர உணவிற்காக இஞ்சி சிக்கன் ட்ரை  செய்தேன் .
மணம் ,நிறம் எல்லாம் நன்றாக இருந்தது . நானும் என் சக நண்பரும் சாப்பிட இருந்தோம்.
வாயில் வைத்த போது சாப்பிட முடிய வில்லை. உப்பு அதிகம் ஆயுடுச்சு .

என்ன செய்ய ஆளுக்கு ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு  விட்டு ,மீதமானதை நாளை எதாவது செய்யலாம் என்று வைத்து விட்டோம்.

காலை எழுந்து குளித்து  விட்டு டிபன் செய்ய யோசித்தேன் .
சிக்கனை எதாவது செய்ய எண்ணினேன் .அப்போது கண்ணில் பட்டது ரவை.
சரி இந்த ரெண்டையும் சேர்த்து கலக்கினால் என்ன என்று தோன்றியது.
உடனே செயலில் இறங்கினேன் .

அந்த மீதமான சிக்கனில் ரெண்டு தம்ளர் வெள்ளம் சேர்த்தேன் .
ஒரு வெங்காயம் நறுக்கி சேர்த்து கொதிக்க வைத்தேன் .
நன்றாக கொதித்ததும் அதில் ரவை சேர்த்து நன்றாக கிளறி ,கறிவேப்பிலை சேர்த்து இறக்கினேன் .
சுவையான ' சிக்கன் உப்புமா' ரெடி.

ரெம்ப நன்றாக இருந்தது.



Thursday, September 9, 2010

மீன் குழம்பு

மீன் குழம்பு

இது நான் நேற்று இரவு செய்து பார்த்தது , நன்றாக இருந்ததால் பதிவு இடுகிறேன் .
எல்லோரும் செய்து பாருங்கள்.

சேர்வைகள்
அ. தக்காளி - 2  (நடுத்தரம் )
ஆ. வெங்காயம் - 2  (பெரிது)
இ.   பூண்டு - 4 விழுது
ஈ . இஞ்சி - ஒரு சிறிய துண்டு .
உ.  பச்சை மிளகாய் - 4
ஊ.    மல்லி பொடி - 2 மேஜை கரண்டி
  எ. மிளகாய் பொடி - 3  மேஜை கரண்டி
ஏ.  மஞ்சள் பொடி - ௧  மேஜை கரண்டி
ஐ . பெருங்காய  தூள் .
ஒ . எண்ணெய் ,உப்பு,கறிவேப்பிலை,புளி - தேவையான அளவு .

மீன் அரை கிலோ எடுத்துகோங்க - சுறா மீன் துண்டுகளாக இருந்தால் நல்லது,அல்லது எதாவது பெரிய மீன் துண்டுகளாக இருந்தாலும் சரி .

செய்முறை.

வெங்காயம்,பூண்டு,இஞ்சி,தக்காளி  ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக வெட்டி கொள்ளவும்.
புளியை நீர் விட்டு கரைத்து  கொள்ளவும் .

சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதங்கியதும் , வெங்காயம் சேர்க்கவும் .
வெங்காயம் கண்ணாடி மாதிரி ஆனதும் தக்காளி சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும்.
தக்காளி மசியும் அழவு வெந்ததும் ,நன்றாக கிளறி அதில் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறவும் .
எண்ணெய் தனியாக பிரியும் போது ,மீன் துண்டங்களை போடவும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள புளி நீரையும் சேர்த்து ,கொதித்ததும் இறக்கி விடவும்.
பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து மூடி வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.

Monday, September 6, 2010

ஒன்னுமே புரியல ....... இந்த பாரதத்திலே





ஏழைமக்களுக்கு இலவசமாக தானியங்களை கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை நடைமுறைப்படுத்த முடியாது. நாட்டில் 37 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்குவது என்பது முடியாத காரியம். அரசின் கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு ‌கொடுத்து விட வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(அய்யா, மன்மோகன் சிங் அவர்களே, சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லுதுன்னா , அதிகமா வீணாக போகும் உணவு பொருளை ஏழை மக்களுக்கு இலவசமா கொடுங்க அப்படினுதான் ,,37% சதவீத மக்கள் எல்லோருக்கும் கொடுக்க சொல்லவில்லை. எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு கொடுங்க போதும் . நீங்க என்ன அதிரடியா பேட்டி எல்லாம் கொடுக்க வேணாம்,).





தொழிற்கூடங்கள் சுற்றுசூழலுக்கு கெடுதல் இல்லாத அளவில் அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் வறுமைகள் ஒழிக்கப்படுவது மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.

(இதன் மூலம் என்ன சொல்ல வராருன்னு  புரியல , தொழில் கூடங்கள் அமைக்க படுமுனு சொல்ரார  இல்ல அமைக்க படாதுன்னு சொல்ல வர்றார  !!! ஒன்னுமே புரியல..)


ஒன்னுமே புரியல ....... இந்த பாரதத்திலே ............


கேள்வி 1. 
37 %  வறுமை கோட்டுக்கு கீழ் என்றால்  , அரசு அவர்களை முன்னேற்ற என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறது. 


கேள்வி 2   .
இத்தனை மக்கள் பட்டினியில் உள்ள போது  இவர்களுக்கு சேவை செய்யும் நாடாளுமன்ற உறுபினர்களுக்கு இப்போது எதற்கு சம்பள உயர்வு,.



Sunday, September 5, 2010

சலனம்



ஒரு வெள்ளிகிழமை விடுமுறை நாள். 




அவன் இவனிடம் ' மார்க்கெட் வரை சென்று சில சாமான் வாங்க வேண்டும் போகலாமா' 


'ஏன் டா விடுமுறை நாளில் எல்லாம் வெளியே வர மாட்டேன் தெரியுமுல்லா உனக்கு'

'இல்லப்பா ஊருக்கு போகணும் சில சாமான் வாங்கலாம் என்று நினைச்சேன் '

'ஏய் சும்மா கம்ம்னு கெட உயிரை எடுக்காத '


'இப்போ வர போறியா  இல்லையா '


'சரி சொன்ன கேக்கவா போற , ஆனா ஒரு கண்டிசன் '


'என்ன சொல்லி தொலை'


'இந்த வெயிலில்   நடக்க எல்லாம் முடியாது , டாக்ஸி ல போகலாம்'


'ஏன் இந்த ஒரு கிலோமீட்டர்  துரத்திற்கு டாக்ஸி வைக்கணுமா'


'டாக்ஸி வைக்கிறதா இருந்தா வரேன் '


'சரி வந்து தொலை'


இருவரும் ரோட்டை அடைந்து டாக்ஸி யை எதிர்நோக்குகிறார்கள்.


இவன் அவனிடம் ' சரி நடக்கலாம் '


'ஏன் நடக்க எல்லாம் முடியாது டாக்ஸி வேணும் என்னு சொன்னே '


'இல்ல அங்க பாரு ஒரு பிகர் நடந்து போகுது அது தான் நடக்கலாமே என்று பார்தேன்'


அவனும் திரும்பி பார்த்தான், 


ஒரு நல்ல பிகர் ,சுமார் ஐந்து அடி உயரமுள்ள philipino  பிகர் ,
நம்ம பாசையில் சொல்லணும் என்றால் ' நாட்டு கட்டை' நல்ல கும்முன்னு இருந்தது.
விரித்த தலை முடி தோள் வரை படர்ந்து இருந்தது .' t -shirt'  மற்றும் முட்டு வரை காலோடு ஒட்டியுள்ள ஒரு கால்சட்டை யும் அணிந்து இருந்தது.
  
'ம் ம் இப்போ வெயில் எல்லாம் ஒன்னும் செய்யாது உனக்கு '


'இல்லப்பா பாரேன் நல்ல பிகர் , '


இருவரும் நடையை எட்டி போட்டார்கள்.

'நல்ல பிகர் , பின்னழகு அற்புதம், நல்ல philipines பிகர் '


'எப்படியவது முகத்தை பார்க்க வேண்டும் எட்டி நட '


இருவரும் வேகத்தை கூட்டி நடந்தார்கள், ஆனால் அதை பிடிக்க முடியவில்லை .


அவர்களும் விடாமல் தொடர்ந்தார்கள் .


அதுவும் அவர்கள் செல்ல வேண்டிய 'மால் ' உள்ளே சென்றது.


இவர்களும் எப்படியாவது முகத்தை பார்த்து விடுவது என்று உள்ளே சென்றனர் .


அது 'trolley '  எடுக்க திரும்பியது .


இவர்கள் அதன் முகத்தை பார்த்தார்கள் . 
  
???????????????????????????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இவர்கள் முகம் 'இஞ்சி தின்ன குரங்கானது '[


அது ஒரு philipine ஆண் .


இவன் அவனிடம் 'இது தான் உன் கூட வெளியே வரமாட்டேன் என்று  சொல்றது ,உன் கூட வந்தாலே இப்படி தான் நடக்குது'.