Search This Blog

Sunday, October 2, 2011

மின்சாரம் -முதல்வரின் கவனத்திற்கு.

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மின்பற்றாக்குறையை தீர்க்கவும் வெளிச்சந்தையி்ல் இருந்து மின்சாரம் வாங்கிட தமிழக முதல்வர் ஜெ., உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் மக்களின் இன்னல்களை தடுக்க முடியும் என்றும், மேலும் மின் ‌வெட்டிற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.- தினமலர் செய்தி
இன்றைய கேரள செய்தி சேனல்களில் ஒரு முக்கிய செய்தி ஒளிபரப்ப படுகின்றது.நெய்வேலியில் இருந்து 100 மெகாவட் மின்சாரம் அதிகமாக கேரள மாநிலத்திற்கு கிடைத்துள்ளபடியால் அங்கு பகல் நேர மின்வெட்டு நிறுத்த பட்டுள்ளது என்றும்,மேலும் இரண்டொரு நாளில் மேலும் அதிகமாக கிடைக்கும் என்றும்,  எப்படி அவர்களுக்கு மட்டும் நம் மாநிலத்தில் இருந்து கிடைக்கின்றது.நம் மாநிலத்தில் உற்பத்தியாவது முதலில் நம் தேவையை சரியாக்க உபயோக படுத்த பட வேண்டும்.பின்னர் அதிகமாக உள்ளதை கொடுக்கலாம் தப்பில்லை.
மத்திய அரசுடன் போராடி முதல்வர் இப்போது அதிகமாக அங்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தி நமக்கு பயன்படுத்திட வேண்டும்.