Search This Blog

Monday, August 30, 2010

இதை கொஞ்சம் கேளுங்க

Enga Area 031Album Name : Enga Area 031
Year : 2009
Banner : RH Crew
Artist : Robin, Siva, Hari, Ajay
Lyrics : Ajay. Hari[English Rap]
Concept n Developed : Rare House
Producers : Robin, Hari, Siva Black Fiction
Mixed n Mastered : Christo Peiris, Gihen Nishan at Music Village

http://mp3.tamilwire.com/enga-area-031.html
Kadhale – Hari, Robin, Siva.mp3

இதை கொஞ்சம் சிரமம் பார்க்காமல்  கேளுங்க.
இதோட வரிகளும் இசையும் எனக்கு பிடித்திருக்கிறது உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறன்  .

பிடித்து இருந்தால் ஒட்டு போடவும்.
விமர்சங்களும் வரவேற்க படுகின்றன .

வாங்க வந்து நல்ல பெயர் வையுங்க .......please

இது ஒரு சிக்கன் கறி. பெயர் என்ன என்று கேக்க கூடாது.அது நீங்க தான் வைக்கணும் .

என்னை மாதிரி உள்ள ஒன்டிகட்டைகளின் சமையல் கலை ,எப்படி இருக்குனு சொல்லுங்க  .

சரி என்  புராணத்தை ஏன் பாடுவேன் ,சரி சமையல் கூடத்திற்கு செல்லலாம் ,

இதற்கு வேண்டிய சேர்வைகள்.

1 கண்டிப்பா சிக்கன் வேணும் ,ம்... ஒரு கிலோ எடுத்துகோங்க  
2    வெங்காயம்  நடுதரத்தில் - 3
3  தக்காளி நடுதரத்தில் - 2
4     தேங்காய் துருவல் - அரை மூடி
5    மிளகாய் வத்தல் பொடி- 3 டி ஸ்பூன் 
6   நல்ல மிளகு பொடி - அரை டி ஸ்பூன் 
7  மஞ்சள் பொடி - 1 டி ஸ்பூன் 
8    மல்லி பொடி - 3 டி ஸ்பூன் 
9  கரம் மசாலா பொடி - 2 டி ஸ்பூன் 
10   உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.


இனி முதல் கட்டமாக  செய்ய வேண்டியவை 

வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
தக்காளியை சிறு துண்டங்களாக வெட்டி கொள்ளவும்.
தேங்காய் துருவலை நன்றாக மிக்சியில் அறைத்து கொள்ளவும்.
எல்லா பொடி வகைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு வாணலியில்  வறுத்து தனியாக வைக்கவும்.வறுக்கும் போது கவனிக்கவும் கருகி போய் விட கூடாது ,நல்ல மணம் வரும் போது நிறுத்தி விடவும்.

இரண்டாம் கட்டம் .

அடுப்பில் வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி ,சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும் .
சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளியையும் உடன் உப்பையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ,சிக்கன் சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும் ,தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.
சிக்கன் ஓரளவு வெந்ததும் வறுத்து வைத்திருக்கும் மசாலா பொடிகளை சேர்த்து அடைத்து வைத்து வேக விடவும் .
நன்றாக வெந்ததும் ,அறைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
பத்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
தேவை என்றால் சிறிது கறி வேப்பிலையோ ,மல்லி இலையோ சேர்த்து பரிமாறவும்  .


நீங்களும் சமைத்து பார்த்து விட்டு ,இந்த பதார்த்தத்திற்கு ஒரு நல்ல பெயர் இடவும்.

வாங்க வந்து நல்ல பெயர் வையுங்க ........

 .

Friday, August 20, 2010

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

மாத சம்பளம் 12,000

மாத தனி செலவு  
10,000

அலுவலக மாத செலவு  
14,000

பயண படி (Rs. 8 per km) 
48,000
( எ. க சென்னை முதல் தில்லி ஒரு முறை யாத்திரை செல்ல 6000 கே/மி  ) 

கூட்டதொடறுக்கான  தினப்படி  
:500/day
தொடர்வண்டி முதல் வகுப்பு பயணம் முற்றிலும் இலவசம் .எத்தனை முறை எங்கு சென்றாலும்.
முதல் வகுப்பு விமான பயணம் :வருடத்திற்கு நாற்பது பயணம் ஒரு துணைவருடன்  .
தில்லியில் காஸ்டல் வாடகை முற்றிலும் இலவசம். 
மின் கட்டணம் ஒரு மாதம் :  50,000 units 
லோக்கல் தொலைபசி இலவசம்  1 ,70,000 அழைப்புகள் .
மொத்த செலவு வருடத்திற்கு 32,00,000 [ i.e. 2.66 இலச்சம் /மாதம் ]
மொத்த ஐந்து வருட செலவு  
1,60,00,000 


இப்போ இது போதாது என்று மாத சம்பளத்தை என்பது ஆயிரமாக உயர்த்த ஏற்பாடு செய்து விட்டார்கள் அதுவும் முன் தேதி இட்டு. 
எனக்கு ஒரு சந்தேகம் அப்போ பதிரெண்டு ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருக்கின்ற எல்லா பணியாளர்களுக்கும் என்பது ஆயிரமாக உயர்த்தி தருவார்களோ .?????????........................
இதை விட கொடுமை இவர்கள் பணியாளர்களே இல்லை ,இவர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்கள் . 

Thursday, August 19, 2010

குழந்தைகள் இருப்பவர்கள் கவனிக்கவும்

இன்று பணி முடிந்து வீட்டிற்கு taxi யில் திரும்பி கொண்டுயிருந்தேன் ,எப்படியும் டாக்ஸி குறைந்தது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது .அமீரகத்தில் உள்ள சாலைகளை பற்றி பதிவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன் .திடீரென நடு    ரோட்டில் பிரேக் இட்டு நிறுத்தி  வண்டியை விட்டு இறங்கி ஓடினார் .என்னடா என்று பார்த்தால் ரோட்டில் ஒரு சிறு பையன் குறுக்காக ஓடுகிறான் ,இரண்டு வயது இருக்கும் .எதை பத்தியும் கவலை படவில்லை அவன் .சாலை என்றால் சிறிய சாலை இல்லை ,மொத்தம் நான்கு வழி சாலை .நான் வந்த  டாக்ஸி டிரைவர் அப்புறத்து எதிர் திசையில்  வந்த வண்டிகளை கை கட்டி நிறுத்தினார் ,இல்லை என்றால்  ஒரு விபத்து உறுதியாக நடந்திருக்கும்.
சம்பவம் என்னவென்றால் அப்பையனின் தகப்பன் சாலையின் ஒரு கரையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வண்டியில் பையனை வைத்து விட்டு ,மறு கரையில் உள்ள கடையில் சமான் வாங்க சாலையை கடந்து சென்று உள்ளார் .அதை பார்த்த சிறுவன் கதவை திறந்து கடகட வன சாலையை கடந்துள்ளான்.
தவறை அவர் மீது வைத்து விட்டு ,அவர் அந்த சிறுவனை சாத்தினார்,என்ன மனிதர் அவர் .
எனவே பதிவர்களே  உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் கவனம் தேவை. வாகனத்தில் விட்டு சென்றால் மறக்காமல் லாக் செய்து செல்லவும் .எப்போதும் child lock setup செய்து வைக்கவும் .

.

Wednesday, August 18, 2010

என்ன கொடுமை சார் இது

என் நிறுவனத்தில் உள்ள சில சுவையான  கதாபாத்திரங்கள் பற்றி ஒரு தொடர் பதிவு.

அவன் நன்றாக பேசுவான் .உங்களிடம் பேசும் போது ,நிறுவனத்தில் உங்களை விட வேறு நல்லவர்கள் ,வல்லவர்கள் ,மென்மையானவர்கள் கிடையாது என்ற ரீதியில் பேசுவான் .
அவன் பேசுவதில் வீழ்ந்து விட்டால் அவ்வளவுதான் ,தலையில் நன்றாக மிளகாய்  அரைத்து விடுவான் . 

எப்படியாவது எனக்கு ஆயிரம் டிர்ஹம் வேணும் ,கண்டிப்பா அடுத்த மாதம் சம்பளம் கிடைத்தவுடன் தந்து விடுவேன் ,இப்படி கூறி என்னிடம் காசு கேட்டான் ஒருவன் .நானும் பிடி குடுக்காமல் டிமிக்கி குடுத்து வந்தேன் .ஆனால்  அவன் விட வில்லை ,தினமும் அலுவலகம் சென்றவுடன் ,எப்படியாவது இன்று ஏற்பாடு செய்து கொடு என்று ஒரே நச்சரிப்பு . அலுவலகத்தில் எல்லோரும் எதோ நான் அவனுக்கு காசு குடுக்க வேண்டும் என்று எண்ணி விட்டார்கள் .
என்ன செய்ய ஏழரை சனி யாரை விட்டது .அந்த கொடுமை தாங்காமல் அவனுக்கு அருனுறு திர்கம் கொடுத்தேன் ,ஒரு மாதத்தில் திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையோடு . ம்ம் கடந்து விட்டது ஆறு மாதம். காசு திரும்ப வர வில்லை.
எப்போ திரும்ப கேட்டல், அவன் கூறும் காரணங்களை கேட்டால் ,தலை சுத்துகிறது.அவனிடம் காசு திரும்ப கேட்டு நொந்து பொய் விட்டேன் .அவன் திரும்ப தர முடியாததற்கு  சொல்லும் காரணங்கள் 
# சம்பளம் முழுவதும் கிடைக்கவில்லை
(அங்கும் கடன் வாங்கி இருந்த எப்படி கிடைக்கும்).
# மகளுக்கு உடம்பிற்கு முடியவில்லை .
(இது எல்லாம்  ஒரு காரணமா யா )
# ஊர்ல மச்சினிக்கு கல்யாணம் 
(அதுக்கும் இதுக்கும் என்னையா சம்பந்தம் ).
# அண்ணன் இப்போ தான் ஊர்ல இருந்து  வந்தாரு
(யோவ் அதுக்கு நான் என்னையா பண்ண முடியும் ).
# உங்களுக்கு வேண்டி வச்சிருந்தேன் ,இப்போ தான் ஒருத்தன் உடம்புக்கு  முடியலன்னு வாங்கி கிட்டு போனான்
(எனக்கு வச்சிருந்தத நீ எப்படியா அவனுக்கு குடுப்ப ).

இத விட இப்போ ஒரு கொடுமை நடந்தது ,நீ எப்படி கண்ட இடத்தில வச்சி எல்லாம் காசு கேக்குற என்று. ஒரு நாள் ராத்திரி கேட்டா ,நீ ஏன் என் கிட்ட கேக்குற ,நிறுவன கணக்காளர் கிட்ட போய் கேளு அவரு குடுபரு .என்ன கொடுமை சார் இது இவன் கிட்ட காசு குடுத்து கிட்டு ,நான் அவனிடன் கேட்க வேண்டுமாம்   .


இது ஒரு எடுத்து காட்டு தான் .இன்னும் இவனை மாதிரி நான்கு ஐந்து பேர் உள்ளனர் .
அவர்களை பற்றி அடுத்த பதிவு.



Thursday, August 12, 2010

நேரமில்லை

அன்று மனிதனிடம் இயந்திரம் இல்லை,வாகனமில்லை, ஆனால் குடும்பத்துடன் செலவிட நிறைய நேரம் இருந்தது.எங்கள் ஊரில் இருந்து உவரி ,திருசெந்தூர் முதலிய திருதலன்களுக்கு , முன்பு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செல்வர்கள்.அங்கு செல்ல குறைத்து அரை நாள் பிடிக்கும் .அப்போது பல இடங்களில் உள்ள உறவினர்கள் எல்லாம்  அங்கு வந்து சேர்ந்து விடுவார்கள். பின்னர் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கி ஒன்றாக சமைத்து உண்டு ,உறவு கதைகள் எல்லாம் கதைத்து திரும்புவார்கள்.ஆனால் இன்று அவ்விடங்களுக்கு இரண்டு மணி நேரத்தில் செல்ல முடிகிறது ஆனால் உறவினர்களை மட்டும் காண முடியவில்லை.
அதை விடுங்க இப்போ என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணம் வருகிறது.ஆனால் என்னால் செல்ல முடியும் என்று தோணவில்லை .அதை கூட விடுங்க ,எனக்கு என் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேச கூட நேரம் இல்லை.அதை விட முக்கியம் என் உடன் பிறந்தவர்களை காண கூட நேரம் இல்லை.நான் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்கு செல்லும் போது அவர்களுக்கு விடுமுறை கிடைப்பதில்லை .
என்ன செய்ய, மனிதன் எத்தனை வேகமாக செல்ல வாகனம் கண்டுபிடித்தாலும் ,எத்தனை வேகமாக ஒரு இடம் விட்டு ஒரு இடம் செல்ல முடித்தாலும் ,எப்ப்போதும் எல்லோரிடமும் கேட்க முடிகின்ற ஒரு வார்த்தை " நேரமில்லை".

அன்று எத்தனை மெதுவாக யாத்திரை செல்ல முடிந்தாலும் எல்லோரிடமும் நல்லது கேட்டதுக்கு சென்று வர நேரமிருந்தது .
இன்று எத்தனை விரைவாக யாத்திரை  செல்ல முடித்தாலும் ,எல்லோரும் சொல்வது நல்லது கேட்டதுக்கு செல்ல நேரமில்லை .

என்று இந்த நேரம் எல்லாம் எங்கு சென்றதோ தெரிய வில்லை.
அது மட்டுமில்லை எனக்கு பதிவு வாசிக்கவும் ,பின்னுட்டமிடவும் ஏன் பதிவு  எழுதவும் கூட "நேரமில்லை".

Tuesday, August 3, 2010

ஏக்கம்

.
.
.
.
.










சிறு வயதில் நீச்சல் பயின்றது.
கோடையில் மீன்பிடித்த சாகசம்.
மாலையில் காற்று வாங்கிய
சந்தோச அனுபவம் .
வறண்ட போது மைதானம் ஆனது .
எல்லாம் என் நினைவில் இன்று.
என் டெஸ்க்டாப் பின்புலமாக பார்கைலே !

Sunday, August 1, 2010

விமானத்தில் பயனிப்பவரா நீங்கள்

ஏர் இந்தியா விமானத்தில் பயண முன் பதிவு செய்துள்ளவரா நீங்கள், அப்படி என்றால் பின் வரும் முன் ஏற்பாடுகள் மற்றும் தகுதியுடன் பயணம் செல்லவும்.
* இரண்டு நாட்கள் உண்ணா நோன்பு இருக்கும் உடற்தகுதி வேண்டும்.
* கட்டு சோறு உண்ணும் பழக்கம் உண்டு என்றால் கட்டு சோறு எடுத்து செல்லவும்.
* உங்களை வரவேற்க உறவினர்கள் வருவார்கள் என்றால் 'கரவன்' வாடகைக்கு எடுத்து வர சொல்லவும்.
* பாடி ஸ்ப்ரே மறக்காது எடுத்து செல்லவும் .
* காற்றில் பறக்கும் வித்தையும் பயிலவும்.ஏன் என்றால் விமானம் பறக்கும் போது டுட்டி சமயம் முடிந்து விட்டால் விமானிகள் இறங்கி சென்று விடுவார்கள்.

தங்கள் பயணம் நல்ல பயணமாக அமைய வாழ்த்துக்கள் .

பின் குறிப்பு : யாருக்காவது வேற நல்ல முன் ஏற்பாடுகள் தோன்றினால் எழுதவும்.