Search This Blog

Monday, July 26, 2010

தொலைந்த முகங்கள்

இந்த அரபு நாட்டுக்கு வந்த பிறகு நிறைய மனிதர்கள் வாழ்கையில் மின்னல் மாதிரி வந்து மறையாத நினைவுகளை தந்து மின்னல் மாதிரி மறைத்து போனவர்கள் ஏராளம் .அவர்களை பத்தி ஒரு நினைவு கூறல் .
முதலில் 'கணபதி 'யை பத்தி சொல்லியாகனும்,ஒரு தஞ்சைகாரன் . அரபு நாட்டு கம்பெனி எப்படி இருக்கும் என்று தெரியாமல் ஒரு எதிர்பார்போடு கம்பனியில் காலடி எடுத்து வைத்தால் ,'தமிழா ' என கேட்டு ஒரு குரல் .அது தான் கணபதி .ஏய் ஒரு தமிழ் ஆள் ,ரெம்ப சந்தோசம் அவனுக்கு இரண்டு வருசமா தமிழ் ஆளுங்க இல்லாத கம்பனியில் ஒருத்தனை பார்த்ததும் .பின்னர் நாங்கள் ரெம்ப நெருக்கம் ஆகிற்றோம் . பின் அவன் ஒரு எதிர்பாரத விபத்தால் திரும்ப அரபு நாடு வர முடியாமல் ஆகிற்று.
அடுத்து 'ஷஹாப் அஹ்மத் ' என்று ஒரு பாகிஸ்தானி மெக்கனிக்கல் எஞ்சினியர் . ஆளை கண்டால் ஒரு 'சுமோ' வீரரை போல் இருப்பர் . அறுபது வயதானவர் ,ஆனால் ரெம்ப அக்டிவ் . அரபு நாட்டில் நாற்பது வருடமாக இருப்பவர் .அவரும் ஒரு விபத்தில் சிக்கி கை கால் செயல்படாமல் நாடு திரும்பி விட்டார்.
அடுத்து 'காசிம் ' இவறும் ஒரு பாகிஸ்தானி .நல்ல வாகன ஓட்டுனர் ,ஆனால் இவறும் ஒரு சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார் .
அடுத்து 'ஹம் பகதூர் ' ஒரு நேபாளி .கம்பெனி ஆபீஸ் பாய் .அவன் நாட்டுக்கு சென்றவன் திரும்ப வரவில்லை.
அடுத்து எங்கள் ரூமில் தங்கியிருந்த 'மோகன்தாஸ் ' ,ஒரு கப்பல் கப்டன் ,இவறும் ஒரு வழக்கில் சிக்கியதால் திரும்ப வர முடியவில்லை .
அடுத்து 'ஹபிப் ரஹ்மான் 'ஒரு பாகிஸ்தானி வாகன ஒட்டி ,இவரை பற்றியும் நிறைய சொல்லலாம் . ஹிந்தி என்னவென்று தெரியாமல் இருந்த என்னை ,ஓரளவு தத்தி பித்தி பேச வைத்தவன் .அவனும் இப்போ எங்கே என தெரியவில்லை .
பின்னர் 'ராஜன் ,அர்ஜுன்,சுரேஷ் ,சுகதன் ,சந்தோஷ் மற்றும் நிறைய பலர்.
நான் இப்போ ஒன்றை பற்றி மட்டும் நினைக்கிறன் , எங்கோ பிறந்து ,எங்கோ வளர்ந்து ,ஒன்றாக வெவேறு களத்தில் பணிபுரித்து ,நம் மனதில் மட்டும் மறையாமல் செய்தது எது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.யாராவது புரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் .

Sunday, July 25, 2010

தேர்வு,குழந்தை பிறப்பு ,இயற்கை பேரிடர் .

இரண்டு தினமாக நிறுவனத்தில் வாங்கி கட்டி கொள்ள வேண்டியதாக போச்சு .
இந்த 'பொலிடிக்ஸ் ' செய்கிற ஆட்களால் மன நிம்மதியே போச்சு . மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் துவண்டு போய் நேற்று மாலை உண்ணவும் இல்லை , இரவு இரண்டு மணி வரை உறங்கவும் இல்லை .பின் எப்படியோ உறங்கி போனேன் . தூக்கத்தில் ஒரு கனவு ,முழு சாரமும் நினைவில் இல்லை இருந்தாலும் விழிப்பு வந்தவுடன் ஒரேஒரு வாக்கியம் மாத்திரம் நினைவு 'இரண்டு தினத்தில் பரீட்சை ரிசல்ட் ஏன் பயப்படவேண்டும் '. சரி ஒரு கலக்கத்தில் இன்று ஆபீஸ் போயாச்சு .திரும்பவும் அதே பிரச்சனை .நிம்மதி இன்றி மதியம் ஆபீஸ் செல்ல வில்லை. ரூமில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு ஒரு சிறிய உறக்கம் , திரும்பவும் கனவு ,இப்போது ஒரு குழந்தை பிறப்பும், நான் தங்கி இருக்கும் அஜ்மானில் ஒரு கொடுன்மழையும் சுறாவளி காற்றும்.முழிப்பு வந்ததும் அந்த கனவும் ஏதோ சொல்ல வருவது போல் தோணியது (தோன்றியது) .உலகில் இப்படி பல பேரிடர்கள் இருக்கும் போது , வாழ்கையில் இந்த சிறிய கஷ்டத்தை நேரிடராவிடில் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வது போல் இருந்தது.
உடனே எல்லாம் சரியாகும் என்ற எண்ணத்தோடு ,இதை ஒரு பதியமாக போட்டு விடலாம் என்று உடனே எழுதி விட்டேன் .

Thursday, July 15, 2010

பெட்ரோல் விலையில் மத்திய அரசின் முரண்பாடு

பெட்ரோல் விலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மக்கள் விரோதமாக உள்ளது .முதலில் பதினைத்து நாட்களுக்கு ஒரு முறை சீரமைக்க படும் என்று கூறிய அரசு எப்போது எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் மறு சீரமைப்பு கூட்டத்தை மாதம் ஒரு முறை என்று மாற்றி உள்ளது . தற்போது கச்சா எண்ணையின் விலை சர்வதேச மதிப்பில் குறைத்து உள்ளது.தற்போது விலை சீரமைத்தால் பெட்ரோல் விலை குறைக்க வேண்டி வரும். தற்போது ஏழு டாலர் பேரல் ஒன்றுக்கு குறைத்துள்ளது .இனியும் குறைய வாய்ப்பு உள்ளது .மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் சேர்ந்து இன்னும் பதினைத்து நாட்களுக்கு மக்களை கொள்ளை அடிக்க மத்திய அரசு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் நலம் எந்த அரசியல் கட்சிக்கும் முக்கியம் இல்லை.

மக்கள் என்ன செய்வார்கள் ,அவர்களால் தனியாக என்ன செய்ய முடியும்.

நம்மளால் ,நமக்காக உழைக்க தேர்தேடுக்க பட்டவர்களால் நாமே வஞ்சிகபட்டோம்.

இது தான் இந்திய ஜனாதிபத்தியம்.

Tuesday, July 6, 2010

இவர்கள் எப்போது திருந்துவார்கள்

'குமரி மாவட்டத்தில் ஒன்பது அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்க பட்டன '
இது இன்றைய சேதி .

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக எதிர் கட்சிகள் அறிவித்த முழு அடைப்பின் போது குமரி மாவட்டத்தில் நேர்ந்தது இது .
படித்தவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்று பெயர் ,ஆனால் செய்வது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் . பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்த பேருந்துகள் என்ன பாவம் செய்தது .
இந்த பேருந்துகளின் கண்ணாடியை யார் வந்து சரி பார்ப்பார்கள் , அப்படி சரி பார்த்தாலும் யார் வீட்டு பணத்தில் சரி பார்ப்பார்கள் . எல்லாம் நம் பணம் என்று இவர்கள் உணர்வார்களா , இவர்கள் இந்த அரசியல்வாதிகளின் சொந்த வாகனத்தை உடைத்தால் சரி எனலாம். அதை செய்யாமல் நம் வாகனத்தை உடைத்து ,நம் பணத்தை நஷ்டமாக்கி உள்ளார்கள் . எதை செய்தவர்கள் உணர்வார்களா ?.
பொது சொத்துகள் அனைத்தும் நம் வரி பணத்தில் வாங்கியவை ,நம் வரி பணத்தில் நிருவகிப்பவை என்பதை அறிவார்களா இவர்கள்.
எங்கே உணர போகிறார்கள் நம் பணத்தையே பயன்படுத்தி பொருட்கள் வாங்கி நமக்கே "இலவசம் " என்று தருவதையே உணராதவர்கள் ,எங்கே இதை உணர போகிறார்கள் .
என்னால் அதிகம் படித்தவர்கள் என கூறிகொள்ளும் குமரி மக்களே இதை உணராத போது ,மற்றவர்களை என்ன சொல்ல? .

Thursday, July 1, 2010

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் வெ . இறைஅன்பு அவர்கள் எழுதிய வேடிக்கை மனிதர்கள் புத்தகம் வாசிக்க நேர்ந்தது . மிகவும் சுவையாக ரசிக்கும் படி உள்ளது . அதில் நான் மிகவும் ரசித்தது ' நடையா ...... இது நடையா ? '. அந்த பாகத்தில் சில துளிகள், இந்த என் முதல் பதிவில் .

'ஒரு கும்பல் தினமும் காலையில் சாலையை அடைத்து கொண்டு நடப்பதையும் , எங்கு புரோட்டா குருமா சுவையாக இருக்கும் என்று உப்பு கார சுவை பற்றி உரக்க பேசி வருவதை காணலாம் . அவர்கள் பேசுகிற பேச்சில் உடம்பில் வியர்வை வருகிறதோ இல்லையோ நாக்கில் எச்சில் ஊறுவதை காணலாம் .'

' என் நண்பர் ஒருவர் சரியான கருமி ,"வாக்கிங் போக ஆரம்பித்த உடன் இளைக்க ஆரம்பித்து விட்டது "என்றார் ."பார்த்தால் தெரியவில்லை , என்றேன் .,'பார்த்தால் தெரியவில்லை " என்றேன் ."நான் சொன்னது பர்சை ......ஷூ , ட்ஷிர்ட் ,எல்லாம் வாங்கி பர்ஸ் காலி " பர்ஸ் இளைத்த வருத்தத்தில் அவரும் சீக்கிரம் இளைத்து போனார் .'

இப்படியாக வெவ்வேறு மனித குணநலன்களை பற்றி சுவையாக எழுதியுள்ளார் .

நல்ல புத்தகம் ,வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படியுங்கள்.