Search This Blog

Saturday, March 26, 2011

என் நினைவு கோப்புகள்


அத்தியாயம் - 2
 எங்கள் வீட்டு தோப்பு

எங்கள் வீடு ஒரு தென்னை மர தோப்பிற்குள் இருந்தது.தென்னை மட்டுமல்லாது மா,பலா,பனை,மாதுளம்,எலும்மிச்சை மற்றும் பூஞ்செடிகளும்  உண்டு.தென்னந்தொப்பு என்றாலும் எல்லாம் சிறிய கன்றுகளாவே இருந்தன, பலன் கொடுக்கும் நிலையில் அஞ்சரணமே (ஐந்து ஆறு) இருந்தன.வீட்டு முற்றத்தின் இடது ஓரம் ஒரு 'கலந்த பனை மரம்' (ஆண் பனை) உண்டு. வைக்கோல் படப்பு மற்றும் மாட்டு தொழுவதின் இடையில் ஒரு கொல்லாமாவும் , அதன் வலகிழக்கு வசமாக ஒரு சிறிய பிலாமரகன்றும் (பலா) உண்டு.கொல்லாமாவு இரண்டு கிளைகளை உடையது.இரண்டு கிளையிலும் வெவ்வேறு சுவையுடைய பழம் காய்க்கும்.பொதுவாக எங்கள் பகுதியில் கொல்லாம்பழம் சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திலே இருக்கும்,ஆனால் எங்கள் வீட்டு கொல்லாம்பழத்தின் நிறம் வெள்ளை நிறத்தில் சிறிய மஞ்சள் பூசினாற் போல் இருக்கும்,அதன் சுவையும் நல்ல மதுரமாக (இனிப்பாக) இருக்கும்.ஆனால் ஒரு பிரச்சனையுண்டு ,பழமும் கொட்டையும் சிறிதாகவும் இருக்கும் மற்றும் அதிகமாகவும் காய்காது.
அடுத்து எங்கள் தோப்பில் பிரதான இடம் பிடித்தது , வீட்டின் தென்மேற்கு மூலையிலுருந்த பிலாவு (பலா).இதுவும் இரண்டு பிரதான கிளைகளையுடையது.இது எண்ணிக்கையில் நிறைய காய்க்கும் ஆனால் சிறிதாகவும் நிறைய மெக்காகவும் பலாசுளை ரெம்ப கம்மியாகவும் இருக்கும்.ஆனால் அதன் சுவை அபாரமாக இருக்கும்.பலாசுளையினுள் இருக்கும் நீரின் சுவையும் அற்புதமாக இருக்கும்.இந்த சக்கை பழத்திக்கு (பலா பழத்திற்கு) எங்கள் ஊரில் எல்லா அறுவடையிலும் முன்பதிவு செய்வார்கள்,நாங்கள் எங்கள் சொந்தங்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு கொடுத்தது போக மீதி உள்ளதே விற்போம்.இந்த பிலாவு இல்லாது மேலும் வீட்டிற்கு வடகிழக்காக இரண்டும் தென்கிழக்காக ஒன்றுமாக மூன்று பிலாவு உண்டு, ஆனால் அவைகளின் சுவை அத்தனை பிரதானம் இல்லை.
வீட்டின் முதல் வாதலுக்கு (வாசல்) நேரே கிழக்காலே ஒரு சிறிய பச்சைனி வகை மாங்காமாவு,இதன் காயும் பழமும் நல்ல தேன் போன்ற தித்திப்பு சுவையுடையது.இதன் வடகிழக்காக ஒரு பெரிய மாங்காமாவு,இது பயங்கர புளிப்பு.இதன் காயை கறிக்கும் பச்சைனி மாங்காயை பழத்திர்க்கும் பயன்படுதுவோம்.இவ்விரண்டு மாமரங்களுக்கிடையே உள்ள இடைவெளியில் ஒரு ஒட்டு எலுமிச்சை புதர் படர்ந்து கிடக்கும், ஒரு கிரிக்கட் பந்து அளவிற்கு  இருக்கும் இதன் காய் கொத்திற்கு இரண்டு மூன்றாக காய்க்கும். வீட்டிற்கு வடமேற்காக ஒரு நாட்டு மாதுளம் செடியுண்டு,இதன் விதை கடினமாக இருந்ததினால் அத்தனை விருப்பமில்லை.வைக்கோல் படப்பிற்கு வடகிழக்காக ஒரு படர்ந்த பூசரி மரமுண்டு ,இதில் தான் சாயுங்காலமானால் கோழி அடையும்.வீட்டின் மேற்கு பக்கம் ஒரு அரண் போல வரிசையாக 10 கமுகு மரமும் உண்டு.
பூஞ்செடிகளின் முதல் இடத்தில் முற்றத்தின் கிழக்காலே எலுமிச்சை வரை படர்ந்து கிடந்த மல்லிகை.எங்கள் ஊரிலே எல்லார் வீட்டு விசேசங்களுக்கும் வந்து பறித்து செல்வார்கள்.இன்று எங்கள் ஊரில் உள்ள அனைத்து மல்லிகைக்கும் முன்னோர் தேடினால் அது கடைசியில் எங்க்கள் மல்லிகையிலேயே வந்து நிற்க்கும்.தென்னை மரத்தை எடுத்து கொண்டால் ரோட்டோரம் மேற்கிலிருந்து ஐந்தாவது மரம் தான் எல்லாருக்கும் பிடித்தது.அதன் தேங்காய் அத்தனை சுவையாக இருக்கும்.தென்னங்கன்று பாவுவதற்கு இதில் இருந்து மூத்த குலையில் இருந்து எடுத்து விட்டு ,மீதமுள்ளதை கறி தேங்காயாக எடுத்து விடுவார்கள்.
மல்லிகை அல்லாது ஒரு சிவந்த ரோஜா,பிச்சி, ஆகியனவும் எங்கள் தோப்பில் இருந்தன.
இது மட்டுமல்லாது களைசெடிகளாக குப்பை கீரை,குப்பைமேனி,வல்லாரை,காயத்திருமேனி,அருகம்புல்,நாயுருவி முதலியனவும் தோப்பு எங்கும் வியாபித்திருக்கும்.இவை எல்லாவற்றையும் விட தோப்பில் எப்பொதும் தண்ணீர் ஊற்றெடுத்து ஒழுகி கொண்டிருக்கும்.
அடுத்த பதிவில் எங்கள் தோப்பின் சுற்றுவட்டம்.

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை....

MANO நாஞ்சில் மனோ said...

உங்க ஊரே மிகவும் பசுமை உள்ள இடம்தானே...