Search This Blog

Sunday, March 27, 2011

என் நினைவு கோப்புகள் 3


அத்தியாயம் - 3
 எங்கள் வீட்டு சுற்றுபுறம்


எங்கள் வீடு தான் ஊரின் தென்மேற்கு பகுதியில் கடைசி வீடு.எங்கள் வீட்டை தாண்டினால் முழுவதும் வாழை மற்றும் வயக்காடு தான்.எங்கள் வீட்டிற்கு வரும் சாலை மண் சாலை தான்,ஏன் எங்கள் ஊரில் அப்போது தார் சாலைகளே கிடையாது.எங்கள் ஊரிலுள்ள எல்லா சாலைகளின் இருமருங்கும் நீரோடைகள் செல்லும்.எங்கள் வீட்டின் தெற்கு பகுதியில் தான் சாலை.அதன் எதிர்பக்கம் 'தாடிகாரர் விளை'.அது ஒரு தரிசு நிலம் எனலாம்.தோராயமாக 3 ஏக்கர் இருக்கும் ,இதன் பிரத்தியேகம் என்னவென்றால் நடுப்பகுதி முழுவதும் காலி நிலம் இடையிடையே அங்கொன்று இங்கொற்றுமாக பனைமரம் இருக்கும்.அதன் நாங்கு சுற்றுப்புறமும் தென்னை,மா,பூசரி,கொய்யா முதலிய மரமிருக்கும்.வீட்டின் வடக்கு பக்கம் 'சுண்டபற்றிவிளை தாத்தாவின் நிலம்',அதனுள் ஒரு தீப்பெட்டி மரமுண்டு.இந்த நிலத்தை பின்னர் நாங்கள் வாங்கி எங்கள் வீட்டுமனையுடன் சேர்த்து விட்டோம்.வீட்டின் மேற்கு பக்கம் காமராஜ் அவர்களின் நிலமும் ,கிழக்கு பக்கம் கண்ணாடிகாரர்,வைகுண்டம் அவர்களின் நிலமும் இருந்தன.
தாடிக்காரரின் தோப்பிற்கு கிழக்காலே 'மலேயகாரர்' மகன் மூத்தவர் 'ராபின்' வீடும்,அதன் கிழக்காலே 'மலேயகாரர்' வீடும் இருந்தன.அதன் எதிர்புரம் 'கணக்காபிள்ளை'யின் வீடு இருந்தது.எங்கள் ஊரில் மலேயகாரர் வீடு தான் பெரிய வீடு,அவர்கள் மலேசியாவில் இருந்து இங்கு குடி பெயர்ந்ததால் 'மலேயகாரர்' என்றழைக்கபட்டார்.

No comments: